Tuesday, 13 March 2012

இருபது வருடங்களாக தொழிலாளர்களை பாடாய் படுத்தி வரும் புகலூர் பாரிஸ் சுகர் பேக்டரி நிர்வாகம்


நமக்கு இனிப்பு சுவை தரும் பண்டங்களை சாப்பிடும் பொது சந்தோசம் பிறக்கும் , ஆனால் அந்த இனிப்பு சுவைக்கு காரணமான  சர்க்கரையை விளைவிக்கும் விவசாயிகளும் , சர்க்கரை ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் அது போன்ற சந்தோசத்தை அனுபவித்த தருணங்கள் மிக குறைவே ஆகும். மிகப்பிரமாண்டமான ஆலையில் ராட்சத அரவை இயந்திரங்களில் அறைபடுவது கரும்பு மட்டுமல்ல ஏழை தொழிலாளர்களும் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். தொழிலாளி  அவன் விளைவிக்கும் பொருள்களில் இருந்தே அன்னியமாக்கபடும் தனிச் சொத்துடமை ஒழியும் வரை இந்த கொடுமைகள் தொடரவே செய்யும் .

Sunday, 11 March 2012

தொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்



பூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்த தொழிலாளர்களான இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ மிகவும் குறைவாகும். முதலில் ட்ரெயினியாக வேலைக்கு சேரும் இவர்களுக்கு ரூ.3000௦௦ ற்கும் குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகிறது. பிறகு என்ன தான் குட்டி கரணம் அடித்து வேலை செய்தாலும் இவர்களின் மாத சம்பளம் ரூ.6000 த்தை தாண்டுவதில்லை. வேலை நிரந்தரமாக்கப்படுவது என்பது அறவே ஒழிக்கப்பட்டு விட்டது.

Thursday, 8 March 2012

அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் , பேரணி


மும்பை , கொல்கத்தா , கேரளாவில் தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் கோரி தொடர்ந்து வேலைநிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அந்த போராட்ட தீ சென்னையில் தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரியும் செவிலியர்களையும் பற்றிக் கொண்டது. மெட்ராஸ் மெடிகல் மிசன் , மலர், அப்பல்லோ ஆகிய மருத்துவ மனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். மெட்ராஸ் மெடிகல் மிசன் , மலர் மருத்துவ மனைகளில் நிர்வாகத்திற்கும் ,தொழிலாளர்களுக்கும் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து செவிலியர்கள் வேலைக்கு திரும்பியுள்ளனர்.(நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளில் பாதிக்கும் மேல் ஏற்றுக்கொண்டது )  

Wednesday, 7 March 2012

சென்னை நகர செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரள்வோம்



கல்வியும் மருத்துவமும் தொழில்களாக கருதப்படுவதில்லை. அவை சேவையாக கருதப்படுகின்றன. சேவை என்பதன் பொருள் ஆதாயம் கருதமால் மனித குலத்திற்கு ஆற்றும் பணியாகும். ஆனால் இவ்விரு துறைகளும் சேவையாக இல்லாமல் லாபம் ஈட்டுவதையே முதல் மற்றும் முழு நோக்கமாகக் கொண்டு செயல்படுபவையாக இன்று ஆகி விட்டன. அதற்கான காரணம் அரசு இவ்விரு துறைகளையும் கைவிட்டுருப்பதாகும். அரசு மருத்துவ மனைகளை மட்டுமே பல காலம் நம்பியிருந்த சாதாரண மக்கள் கூட இன்று தனியார் மருத்துமனைகள் பக்கம் தள்ளப்படுகின்றனர். அம்மருத்துவமனைகள் அப்பட்டமான வணிக வளாகங்கள் போல் ஆகிவிட்டன. அறை வாடகையிலிருந்து மருத்துவர் கட்டணம் வரை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவை கட்டணங்களை வசூலித்து குவிக்கின்றன.


Sunday, 4 March 2012

தனியார் மருத்துவமனை செவிலியர்களின் வேலைநிறுத்தம் வெல்லட்டும்



சென்னையில் உள்ள மிகப்பெரிய கார்பரேட் மருத்துவமனைகளான அப்பல்லோ,போர்ட்டிஸ் மலர், மியாட் , மெட்ராஸ் மெடிகல் மிசன் , குளோபல், பில்ராத் போன்ற மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் ஊதிய உயர்வு, ஓவர் டைம்மிற்கு இரண்டு மடங்கு ஊதியம் , கொத்தடிமைகளாக ஆக்கி வைத்துள்ள சட்டவிரோத ஒப்பந்த முறையை ஒழிப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள் , வேலை நிறுத்தத்திற்கு முன்பாகவே முறைபடி ஸ்ட்ரைக் நோட்டீஸ் நிர்வாகத்திற்கு அளித்துள்ளனர்.